யாழில் கருக்கலைப்பு வைத்தியசாலை என்ற பெயரில் மருதனார்மடம்பகுதியில் இயங்கும் சட்டவிரோத கருக்கலைப்பு வைத்தியசாலைக்கும் அப்பகுதிக்கு சற்றுத் தொலைவில் இயங்கும் இன்னொரு சட்டவிரோத வைத்தியருக்கும் இடையில் கடும் மோதல்கள் எழுந்துள்ளன.
இரு வைத்தியர்களும் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் தமது வைத்தியசாலைகளை பெருமளவு பணம் கொடுத்து பதிவு செய்து தற்போது நடாத்தி வருகின்றனர்.
இந் நிலையில் வைத்தியசாலைக்கு சட்டவிரோத கருக்கலைப்புக்காக செல்பவர்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகியதுடன் குறித்த வைத்தியசாலையில் கருக்கலைப்புக்குச் சென்ற இளம் குடும்பப் பெண் கடும் இரத்தப்போக்கால் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனாவைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு கடும் முயற்சியில் உயிர்தப்பியிருந்தார்.
அத்துடன் கருக்கலைப்பு செய்ய செல்லும் பெண்களை அந்த வைத்தியசாலையின் பொறுப்பாளரான வைத்தியர் கருக்கலைப்புச் செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து அங்கு கருக்கலைப்புக்கு பெண்கள் செல்வது குறைந்து இன்னொரு வைத்தியரும் சட்டவிரோத கருக்கலைபை அதே பகுதியில் செய்வதாக அறிந்து அங்கு பெண்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த வைத்தியர் அவரது நடவடிக்கை தொடர்பாக பலருக்கு கள்ள பெட்டிசம் போடத் தொடங்கியதுடன் அவரால் தனக்கு அச்சுறுத்தல் எனவும் கூறி வருவதாக தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த வைத்தியர் யாழ்ப்பாணத்தில் மக்கள் நையாண்டி பண்ணும் அளவுக்கு அவனது சில கோணங்கித் தனமான செயற்பாடுகள் காணப்பட்டது.
அண்மையில் அவனது வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற 3 வயதுக் குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தை திசை திருப்புவதற்காக தனது தந்தையின் வீட்டுக்கு தானே பெற்றோல் ஊற்றி சிறிது இடத்தை எரித்து விட்டு தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக கூறித்திரிவதும் குறிப்பிடத்தக்கது.
பலாலி இராணுவத்துடன் நெருக்கமாக குறித்த வைத்தியர் தொழிற்படுவதுடன் சிவில்பாதுகாப்பு கடமையில் உள்ள பல பெண்களுக்கு இவரே வைத்தியம் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இவனது வைத்தியசாலைக்கு போகும் பெண்களை அப்பகுதியில் உள்ளவர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதாகவும் அவர்கள் கருக்கலைப்புக்குப் போகலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் சந்தேகப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.