Loading...
மட்டக்குளி பகுதியில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வாகனத்தில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே,குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 24 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
Loading...
மட்டக்குளி ஜூப்லி வீதியில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கைகளில் மட்டக்குளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Loading...