Loading...
கிழக்கு கடற்படை வீர்ர்களால் நேற்று திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ கடற்பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு யானைகள் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளன.
ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர படகினால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Loading...
இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் ஆதரவுடன் குறித்த யானைகள் கடற்படையினரின் உதவியுடன் மீட்க்கப்பட்டுள்ளன.
மூன்று துரித தாக்குதல் படகுகள் மற்றும் கடற்படை சுழியோடிகள் குழு ஒன்றும் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
Loading...