புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பொறுப்பேற்ற அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த நட்புறவு சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, பாரம்பரிய முறைப்படி நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
புதிய கடற்படை தளபதியாக பணியை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையாவும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்திதுள்ளார்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது தினேஷ் பிரியந்தவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தினேஷ் பிரியந்த, 2017ஆம் ஆண்டு இலண்டன் நகரில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, பாரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் யூ.ஆர்.ரொட்றிகோ மற்றும் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிசாந்த ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.