சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பெண்ணொருவருக்கு சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.
விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் குறித்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.
பதுளை, மஹியங்கனை வீதியைச் சேர்ந்த வை.கே.லக்சன் புரமோத்யா எனும் இந்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வீதி விபத்தொன்றில் சிக்கிக்கொண்டார். அவர் மூளைச் சாவு நிலையிலுள்ளார்.
இந்த நிலையில், அவரது பெற்றோரின் சம்மதத்துடன் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று தமிழ்ப் பெண்ணுக்கும் மற்றைய சிறுநீரகம் குருநாகல் மல்சிரிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.