Loading...
கிளிநொச்சியில் இரண்டு இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு இராணுவ வீரர்கள் இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தமிழ் மொழி பேசும் இராணுவத்தினர் எனவும், அவர்கள் இருவருக்கும் இடது கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவமானது தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...