எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் பிரசாரங்களை இரத்தினபுரியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கு அமைய கொழும்பு கெம்பல் மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் 71 வது வருடாந்த மாநாட்டை அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் நடைபெறும் 71 ஆம் ஆண்டு மாநாட்டின் பின்னரே மாவட்ட மட்டத்திலான கூட்டங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தப்படவுள்ளன.
கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருந்த நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் பொருளாதாரத்தை பயன்படுத்தி அடுத்த சில வருடங்களில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் உட்பட நாட்டின் முழு பொருளாதாரத்தையும் முன்னேற்றும் விதம் குறித்து பிரதமர் மக்களுக்கு விளக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.