அவுஸ்திரேலியாவின் மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்பிற்கு இடையே புகலிடம் கோரிச் சென்ற ஆறு சீனர்களை கொண்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் சாய்பாய் தீவைச் சென்றடைந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஐந்து சீனர்கள் மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக பப்புவா நியூகினியாவை சேர்ந்த ஒருவரும் சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவின்ஸ்லாண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை கையாண்டு வரும் அவுஸ்திரேலிய அரசு படகு வழியே புகலிடம் கோரி வருபவர்களை திருப்பி அனுப்பி வருகிறது.
அந்த வகையில் இதுவரை 31 படகுகளில் வந்த 770 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் 2013 இற்கு முன் படகில் வந்த பல்வேறு நாடுகளின் அகதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.