கடையில் இனிப்பு வாங்கி சாப்பிட்ட இரண்டு பாடசாலை மாணவிகள் போதை மயக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்சையில் உள்ள பிரபல பாடசாலையில் பயிலும் இரு மாணவிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,
லவ் என்ற பெயரில் ஆரம்பமாகும் இனிப்பு ஒன்றினை குறித்த மாணவிகள் கடை ஒன்றில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குறித்த மாணவிகளுக்கு போத மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மாணவிகள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் ரிஸ்லி றிசார்ட், மொஹமட் றிசார்ட் மொஹமட் ரிஸ்வான் ஆகிய கடை உரிமையாளர்களே குறித்த மோசமான இனிப்பினை விற்பனை செய்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு விற்பனை செய்யப்பட்ட இனிப்பு, இரசாயன பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த பாடசாலையின் அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.