எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மகிந்த இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் மாகம்புர துறைமுகம் விற்பனைச் செய்யப்பட்ட பணம் திறைச்சேரிக்குச் செல்லவில்லை என தெரிவித்த மகிந்த
அது இலங்கை வங்கியில் வேறு முறையில் வைப்பிலிடப்பட்டதாக தாம் அறிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், வீதி அமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு அவப்பெயர் வாங்க விரும்பவில்லை எனவும்
அதன் காரணத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.