Loading...
பண்டிகைக்காலத்தில் கொழும்பு நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பிரகாரம் இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கனரகவாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
Loading...
மாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கனரக வாகனங்களை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகைக்காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...