Loading...
இந்தியாவில் வசிக்கும் 9000 இலங்கை தமிழ் அகதிகள் வேலூர் மற்றும் அப்துல்புரம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகதிகள் வசிக்கும் கிராமங்களை சூழவுள்ள நெல் மற்றும் கரும்பு பயிர்ச்செய்கை நிலங்கள் நேற்று (27) இரவு முதல் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக கிராமங்களை அண்டி வாழும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...
வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அகதிகள், இந்திய பிராந்திய நிர்வாகியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளுக்கு வழக்கப்படும் நிவாரணங்கள் போன்றே அகதிகளுக்கும் நிவாரணங்களும், நட்டயீடுகளையும் வழங்கப்படும் என நிர்வாகிகள் உறுதியளித்துள்ளார்.
Loading...