வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பொறுத்திருந்தே பதிலளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய தகவலின்போதே மாவை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தைச் சாடி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையை தான் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை என தெரிவித்த மாவை
எனினும், அவரின் கருத்துக்களுக்கு பொறுத்திருந்தே பதிலளிக்கபோவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த வாராந்த கேள்வி பதிலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாகச் சாடி கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க நிபந்தனைகளையும் அவர் விதித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.