வலையமைப்பு இல்லாமல் செயல்படும் புதிய அப்ளிகேசன் ஒன்றை, ஸ்பெயின் நாட்டுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
பெரும்பாலான பயனாளிகள் நவீன தொலைபேசிகளினைப் பயன்படுத்திவரும் நிலையில், எஸ்.ஓ.எஸ் (SOS -Save our Souls) வசதியைப் போல் புதிதாக ஓர் அப்ளிகேசனை, ஸ்பெயின் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும், ஜோஸ் ஏஞ்சல் பெர்னா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
பயனாளிகள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும்போது, அவர்களுக்கு உதவும் விதமாக கண்டறியப்பட்ட ஒரு சமிக்ஞை முறையே, SOS வசதியாகும்.
அதேபோல் இந்தப் புதிய அப்ளிகேசன் மூலம் பயனர்கள் வலையமைப்பு இல்லாத இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் ஸ்மார்ட்போன்களில் வை-பை வசதியை எழுப்பி அதைக் குறிப்பிட்ட சில கிலோமீட்டர் வரை, அனுப்பும் அளவுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய அப்ளிகேசன், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.