ஊவா மாகாண சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவிருந்த நிலையில், அதன்போது இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மாகாண சபையின் முன்னால் இவ்வாறு மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மோதலில் இரண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவர் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.
மோதலில் காயமடைந்தவர்கள், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்த வேளையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் கட்சிதாவிய ஆறுமுகம் கணேசமூர்த்தி ஊவா மாகாண சபைக்குள் உள்நுழைகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான உபாலி சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.