Loading...
சிரியாவில் இடம்பெறும் மனித படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையகத்தில் லிந்துலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
2009ம் ஆண்டு இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்ததாக தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்; மலையக மக்கள் சார்பில் சிரிய மக்களுக்காக போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...