பிரித்தானியாவில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீதான இரசாயண நச்சு வாயு தாக்குதல் சம்பவம் தொடர்பில், சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான அமைப்பு இன்னும் 3 வாரங்களில் பகுப்பாய்வு முடிவை வெளியிடும் என அறிவித்துள்ளது.
குறித்த சம்வம் தொடர்பில், மாதிரிகளை சேகரிக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் நெதர்லாந்தை தலைமையகமாக கொண்ட சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான அமைப்பைச் சேர்நத குழு ஒன்று பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான குழுவின் தலைவர் ஆஹ்மெத் தெரிவிக்கையில், பிரித்தானிய அரசின் கோரிக்கைகு இணங்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ள அதேவேளை ஆய்வு முடிவுகளை குறைந்தபட்சம் 3 வாரங்களின் பின்னரே வெளியிட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேற்படி குழுவினர் மாதிரிகள் சிலவற்றை சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெற்றுக்கொள்வர். அதனையடுத்து முடிவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.
எவ்வாறாயினும் ஆய்வின் முடிவை நாங்கள் நிச்சயமாக முன்கூட்டியே தெரிவிக்க முடியாது இது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் ரஷ்யமுன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் இரசாயண நச்சு வாயுவினால் தாக்ப்பட்டு மயக்கமடைந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து பதற்றநிலையை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்கத்கது.