Loading...
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனியின் துடுப்பாட்ட மட்டையே, கிரிக்கெட் அரங்கில் அதிக தொகைக்கு விலைபோன துடுப்பாட்ட மட்டையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் இறுதிபோட்டியில், டோனி இறுதி பந்தில் சிக்ஸர் விளாசிய துடுப்பாட்ட மட்டையே இவ்வாறு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த துடுப்பாட்ட மட்டை இந்திய மதிப்பில் சுமார் 91 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, ரிக்கி பொண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோரின் துடுப்பாட்ட மட்டைகள் விற்கப்பட்டாலும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...