2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 11 சிக்சருடன் 104 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு கெயில் பதிலடி கொடுத்தார்.
நட்சத்திர வீரரான கெயில் அதிக விலைக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் சுற்றில் யாருமே அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
பின்னர் ஒரு வழியாக அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
அவர் சரியான பார்மில் இல்லை என கூறப்பட்ட நிலையிலேயே தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் அதற்கு கெயில் முற்றுபுள்ளி வைத்துள்ளார்