விராட் கோஹ்லிக்கு ரத்ததால் எழுத்தப்பட்டிருந்த ரசிகரின் கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டதாக தனது அனுபவத்தை பேட்டியின் போது தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஜ்சர்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் விராட் கோஹ்லி தனது ரசிகருடன் ஏற்பட்ட மோசமான சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், நான் டெல்லியில் இருந்து காரில் பயணித்துக்கொண்டிருக்கையில், எனது காரின் ஜன்னல் வழியாக ஒரு கடிதம் எனக்கு கொடுக்கப்பட்டது. அங்கு பலர் இருந்ததால் அதனை கொடுத்த ரசிகர் யார் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை.
அந்த கடிதத்தை திறந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன், அதே சமயத்தில் மிகவும் பயமாக இருந்தது. ஏனெனில் அந்த ரசிகர் தனது ரத்தத்தால் கடிதத்தை எழுதியிருந்தார். இது ஒரு மோசமான சம்பவம். இதனை என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கூறியுள்ளார்.