தெய்வங்களுக்கும் வாழைப்பழம் படைப்பதற்கு பல தவறான காரணங்கள் இதுவரை கூறப்பட்ட போதிலும் அதன் உண்மையாக காரணத்தை தெரிந்த கொள்ளுங்கள்.
விலை குறைவு மற்றும் எல்லா காலங்களிலும் கிடைப்பதால் தான் வாழைப்பழம் தெய்வங்களுக்கு படைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அல்லது நினைத்தவுடன் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே வாழைப்பழம் இவ்வாறு படைப்பதாக பலர் கூறிகின்றனர்.
எனினும், தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைப்பதற்கு காரணம் உள்ளது.
ஏனைய எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, அதன் கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.
வாழைப்பழம் நமது எச்சில் படாதவை. அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகின்றமையினாலேயே இவ்வாறு தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைக்கப்படுகின்றது.