காலம் காரணமாக மக்கள் தேநீர் குடிக்கும் பழக்கத்தை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். தேநீரில் பல நன்மைகள் இருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் கூறப்பட்டது.
எனினும் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை தேநீர் அருந்த வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
நாள் ஒன்றுக்குமூன்று கோப்பை தேநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயப் பிரச்சினைகள் குறையும். 11 வீதம் இதனை பிரச்சினை குறைய வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக தேநீர் அருந்தினால் ஏற்படும் பிரச்சினை என்ன?
- ஒரு கோப்பை தேநீரில் 40 மில்லிகிராம் வரை காபின் உள்ளன.
- தேநீர் அதிகமாகக் குடிக்கும்போது காபினுக்கு அடிமையாக வாய்ப்புகள் உள்ளது.
- கவனச் சிதறல்
- பதற்றம்
- அமைதியின்மை
- தூக்க முறையில் பாதிப்பு
- இது போன்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்க வாய்ப்புள்ளது.
தேநீருக்கும் இரும்புச் சத்து குறைபாட்டிற்கு இடையிலான காரணம் என்ன?
- தேநீரில் டான்னின்ஸ் (Tannins) என்னும் வேதிப்பொருள் தேநீரில் உள்ளது.
- இது இரும்புச் சத்தை ஏற்றுக்கொள்ளும் உடலின் தன்மை பாதிக்கப்படலாம்
- இரும்புச் சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்பவர்கள் அதிகமாகத் தேநீர் குடித்தால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
தேநீரில் உளடள மருத்துவப் பாதிப்பு?
அதிகமாகத் தேநீர் குடிப்பதால் சில மருந்துகள் உடலில் செயலிலந்து போக வாய்ப்புள்ளது.
எனவே அதிகத் தேநீர் குடிக்கும் பழக்கம் கொண்டவரானால் மருத்துவரிடம் சொல்வது நல்லது.
எப்படியிருப்பினும் சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை தேநீர் குடிப்பது எந்தக் பிரச்சினையும் ஏற்படுத்தாதென ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.