இந்திய அணியில் பல்வேறு சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அனைவரும் விராட் கோஹ்லியை நம்பி இருக்கிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும், இந்திய அணி குறித்து அவர் கூறியதாவது, டோனியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கோஹ்லியிடம் சென்றபோது இந்திய அணி நிச்சயம் வீழும் என பலரும் நினைத்தனர்.
ஆனால் கோஹ்லி தலைமையிலான அணி பல வெற்றிகளை கண்டு, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது. ஆனால், இப்போது ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படும் கோஹ்லி, கேப்டனாக சொதப்புகிறார்.
வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தோல்வி முகம் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.