Loading...
வேலூர் மாவட்டம் புளியங்கன்னு பகுதியை சேர்ந்த திருநங்கை தமிழ்ச்செல்வி செவிலியர் படிக்க விரும்பியுள்ளார்.
பள்ளிப்படிப்பிற்குப் பிறகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் படிப்பிற்காக விண்ணப்பித்தார்.
ஆனால் திருநங்கை என்பதால் அவரது விண்ணப்பப் படிவம் 2 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
Loading...
இந்த நிலையில், இவரது வழக்கினை தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்ச் செல்வியை செவிலியர் படிப்பில் சேர்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்க்கல்லூரியில் கல்வியை தொடர வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இதேவேளை, தமிழ்ச்செல்வி இந்தியாவின் முதல் அரசுக் கல்லூரி செவிலியர் மாணவி என்றும் எவ்வித பாடுபாடும் இன்றி சிறந்த முறையில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் சாந்திமலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...