Loading...
அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம்.
Loading...
தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு 2 நிமிடம் நெற்றியில் வைத்து மசாஜ் செய்தால் தீராத தலைவலி விரைவாக குணமடையும்.
ஒற்றை தலைவலி குணமாக
- இன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
- மேலும் எப்போதெல்லாம் தலைவலி இருப்பது போல் உணர்கிறீர்களோ அப்போது ஐஸ் கட்டிகளை எடுத்து, கழுத்து மற்றும் நெற்றிப் பகுதிகளில் சில நிமிடங்கள் வரை வைத்து அழுத்திப் பிடித்திருங்கள்.
- இப்படி ஐஸ்கட்டிகள் மூலம் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற்று தலைவலியை குறைக்கின்றன.
ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும் பயன்கள்
- முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது.
- முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் கருப்பாக முக அழகை கெடுக்கும். தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.
- தொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை அகற்ற முடியும்.
- வெயிலினால் உங்கள் முகம் சோர்வாக, கலை இழந்து இருக்கும். அப்போது ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.
- கண்களை அழகாக்க, காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
- முகத்தில் எண்ணெய் வடிதல் ஆனது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இதிலிருந்து விடுபட ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்.
- முகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் சிவந்து காணப்படும். இதனை சரிசெய்ய முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுக்கவும்.
Loading...