Loading...
பால்மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆராயப்பட்டு வாழ்க்கைச் செலவு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த விலை அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Loading...
எவ்வாறாயினும் நுகர்வோரின் பாதுகாப்பு முதலில் கவனத்தில் கொள்ளப்பட்டு மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...