ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி திரைக்கு வந்த பேட்ட படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம்பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணமிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அடுத்து ரஜினி நடிக்கவிருப்பதாக தெரிகிறது. முதலில் இப்படத்துக்கு நாற்காலி என பெயரிடப்படவிருப்பதாக தவல் வெளியானது. ஆனால் ரஜினி நடிக்கும் படத்துக்கு நாற்காலி என பெயரிடவில்லை என விளக்கம் அளித்தார் முருகதாஸ்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினியின் தோற்றம் எப்படி யிருக்கும் என்று ரசிகர்கள் டிசைன்செய்து வரைந்த போஸ்டர் இணைய தளத்தில் பரவியது. தற்போது இப்படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் இரட்டை வேடம் ஏற்று நடித்த படங்கள் நிறைய வெளியாகி இருக்கின்றன. அவை ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடம் ஏற்கிறாராம்.
போலீஸ் அதிகாரி வேடம், சமூக சீர்த்திருத்தவாதி என இருவித பாத்திரத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சு நடக்கிறது.
இரட்டை வேடம், இரண்டு ஜோடி என கேட்கவே சுவாரஸ்யமாக உள்ள இப்படத்தின் தகவல்களை இயக்குனர் தரப்பு இதுவரை உறுதி செய்யவில்லையே என்ற ஆதங்கம் ரசிகர்கள் தரப்பில் இருந்த வண்ண மிருக்கிறது.