Loading...
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக பூஜித ஜயசுந்தர அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்ற தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா திபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
Loading...
நாட்டில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜயசுந்தர ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட்டிருந்தார்.
இதனை அடுத்து ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியபோதும் பூஜித ஜயசுந்தர பதவி விலகாதமையினை அடுத்து கட்டாய விடுமுறையில் அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Loading...