Loading...
வடக்கு ஆளுனரால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், தற்போதைய சூழலில் தம்மால் அந்த பேச்சில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என கடிதம் மூலம் அறிவித்து, பரபரப்பை கிளப்பியுள்ளது ஆவா வாள்வெட்டு குழு.
இன்று ஆவா வெளியிட்டுள்ள கடிதத்தில், சமூகத்தை பாதுகாத்தல், கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்தவே தமது அமைப்பு உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தமது அமைப்பின் தலைவர் சிறைவாசத்தின் பின், ஜனநாயக ரீதியான அமைப்பொன்றை கட்டியெழுப்பி சமூக செயற்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...