இலங்கையில் உள்ள அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி அரச பணியாளர்களாக உள்ள ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் பாலாரும் எவ்வாறான உடையினை அணிந்துகொண்டு கடமைக்குச் சமூகமளிக்கவேண்டும் என்பது தொடர்பிலும் அரச நிறுவனத்திற்கு சேவையைப் பெற வருபவர்கள் எவ்வாறான உடையினை அணிந்துகொண்டு வரவேண்டுமென்பது பற்றியும் சுற்று நிருபத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
ஏற்கனவே அண்மையில் வெளிவந்த ஆடை தொடர்பான சுற்றறிக்கை சர்ச்சைக்குள்ளானமை தெரிந்ததே, இதனையடுத்து புதிய சுற்றறிக்கையை வெளியிட கடந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளியான சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் சேலை மட்டுமே அணியவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்தது. குறிப்பாக பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் சார்ந்து அதீத எதிர்ப்பு நிலவியது.
இதற்கமைவாகவே தற்பொழுது இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.