மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள் உள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக 720 கைதிகள் மேன்மூறையீடு செய்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ள கைதிகளைத் தவிர, போதைப்பொருள் குற்றச்சாட்டினால் பெண்ணொருவர் உட்பட மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 கைதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 4 பாகிஸ்தானிய பிரஜைகளும் உள்ளடங்குவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 பேரில் நால்வருக்கு
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் .
இதேவேளை, அலுகோசு பதவிக்காக இருவர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.