இலங்கையில் இனப்பிரச்சினைகள் இடம்பெறுவதற்கு முன் வாழ்ந்தவர்கள் பரந்த மனம் உள்ள பாக்கியசாலிகள் என்றே கூற வேண்டும், அவர்களது சிந்தனைகளும் ,செயற்பாடுகளும் எல்லை தாண்டிய இன உறவைக் கொண்டவை, அவற்றில் உறைந்து கிடக்கும் இன உறவை வெளிக் கொண்டு வரும் பதிவே இதுவாகும்.
அறிமுகம்,
இரத்தினாம்பாள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்தவர், தனது கணவனின் இழப்பின் பின்னர், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து தனது பிள்ளைகளை கல்வியில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர், இன்று 93 வயதிலும், சிறந்த பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர், அன்றாடப் பத்திரிகைகளையும், நூல்களையும் படித்து வருகின்றார்.
இனஉறவு உணர்வுகள்,
இரத்தினாம்பாளிடம் யாழ்ப்பாண தமிழர், முஸ்லிம் இன உறவு பற்றிக் கேட்ட வேளையில் அவர் கூறிய பதில்கள் மிகவும் உணர்வு ரீதியானவை, அவர் தனது சாவகச்சேரி பிரதேசத்தில் சோனகர்கள் நிறைய வாழ்த்தாகவும், அவை பற்றிய பல சம்பவங்கள் இன்னும் ஞாகபம் உள்ளதாகவும் கூறுகின்றார்.
குடும்பஉறவு
தனது சகோதரரான செல்லப்பாவுடன் பல சோனக நண்பர்கள் யாழ்ப்பாண றிவோ கல்லூரியில் படித்ததாகவும், அவர்கள் தமது வீட்டிற்கு வருவதாகவும், குறிப்பிட்ட அவர் தமது வீட்டில் உள்ள பலாப்பழங்களை வாங்கிச் செல்வர் என்பதோடு நன்றாகப் பழகினர் என்றார், நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அந்த பழைய சோனகரின் ஞாபகம் வருவதாக்க் குறிப்பிட்டாது ,எனது மனதை மிகவும் சஞ்சலத்திற்குள்ளாக்கியமது.
வியாபாரம்
அக்கால, சாவகச்சேரி நகரில் அபூபக்கர் கடை, சுல்தான் கடை என்ற இரண்டு கடைகள் மிகப் பெரியவை மட்டுமல்ல மிகவும் பிரபலமாக இருந்தன எனவும், அவற்றில் அப்பிரதேச மக்களுக்கள் விவசாய உபகரணங்களான மண்வெட்டி, இரும்பு, கோடரி, போன்ற பல பொருட்களை வாங்குவர் எனவும், தமிழ் மக்களை அவர்கள் கண்ணியமாக மதித்தனராம், அதே போல தமிழ் மக்களின் பொருட்களையும் அவர்கள் வாங்கினர் என்கின்றார்.
சமயத்தொடர்பு
தனங்கிளப்பிலே இருந்த பள்ளிவாசலில் இருந்து ஒலிக்கும் பாடல் (பாங்கொலி) தனது வீட்டில் கேட்கும் எனக் கூறிய அவர், அப்பள்ளிவாசலை தான் பல முறை அவதானித்து சென்றுள்ளதாகவும் ஞாபகப்படுத்துகின்றார், கன சோனகர் அங்கு இருந்த்தஆக கூறும் ரத்தினாம்பாள், அவர்கள் வெளியேற்றப்பட்டது தனக்கு பெரிய கவலை என்கின்றார்.
இனவிரிசல் செயல்கள்
சாவகசரசேரியில் வாழ்ந்த சோனகர் வெளியேற்றப்பட்ட தினத்தை தன்னால் மறக்க முடியாது என மனம்வருந்தும் ரத்தினாம்பாள் அது பற்றி இவ்வாறு கூறினார்,”ஒரு நாள் தனது மகன் ஆனநரதன் ஓடி வந்து ,அம்மா சோனகர் ஆக்களை புலிகள் கலைச்சு விட்டினம், அதுகள் தெருவில் நின்று கத்துதுகள் பாவமாக் கிடக்கு” என்று கூறிய நாளை இன்று நினைத்தாலும் கவலைதான் என்று கூறினார், அவைகள் எங்க இருக்கினம் என வினவிய அவர் கொஞ்சம் பேர் இப்ப வந.து தங்கட இடத்தில இருக்கினமாம் என்று சொல்லினம் ” என்றும் குறிப்பிட்டார்.
போர்க்காலத்தில் தான் காசு கட்டச் (பவுண் விழுத்துதல் )சென்ற புலிகளின் கச்சாய் அலுவலகம் “சோனகரின் பெரிய வீடு என்று கூறிய அவர், சரியான கவலையுடன் வீடு வந்த்தாக குறிப்பிட்டார்.
ஏக்கமும், எதிர்பார்ப்பும்,
அந்த மக்களை கலைச்சு விட்டவங்களுக்கு செல்லப்பாவும், ஆனந்தனும் என்றும் ஆதரவில்லை என்று கூறும் இவர், அன்று போல் உறவுகள் இருந்திருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன் என்று ஏங்குகின்றார்.
படிப்பினை,
இலங்கையில், யுத்தமும், வெளியேற்றமும் எல்லா மக்களையும் பாதித்திருக்கின்றது மட்டுமல்ல, அதில் நல்ல பல உறவுகளும் இழக்கப்பட்டிருக்கின்றன, அவை இன்னும் சந்திக்க முடியாமலே நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன, என்பதற்கு ரத்தினாம்பாளின் உரையாடலும், ஏக்கமும் நல்லதொரு உதாரணமாகும்.
இனியாவது சிந்திப்போம், எம் இன உறவையும், உணர்வுகளையும் உள்மனதில் இருந்து கட்டமைத்து, புதிய பாதையில் பயணிக்க இரத்தினம்பாளின் அனுபவம் எம் அனைவருக்கும் நல்ல படிப்பினையாகும்.
அம்மாச்சி, உங்கள் எண்ணம் இத் தேசத்தில் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறியே தீரும், உங்கள் நீண்ட ஆயுளுக்கு எனது பிரார்த்தனைகள்.