பாலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராதிகா ஆப்தே தன்னைப்பற்றிய வீடியோக் காட்சி சர்ச்சையினை உண்மையாக்கியுள்ளார்.
சமீபத்தில் ராதிகா ஆப்தேவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராதிகா ஆப்தே, வேறு பெண்ணின் உடலை எனது முகத்துடன் மார்ப்பிங் செய்துள்ளதாக கோபத்துடன் ட்விட் செய்திருந்தார்.
தற்போது இதனை உண்மையாக்கும் விதமாக பொம்பாய்ரியா என்ற படத்தில் ராதிகா ஆப்தேவின் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பொம்பாய்ரியா படத்தின் இயக்குநர் கூறியதாவது, ராதிகா ஆப்தே நடித்த மேட்லி படக்காட்சிகள் இணையத்தில் வெளியானபோதுதான் நாங்களும் இந்தக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம்.
நடந்த சம்பவங்களால் வருத்தத்தில் இருந்த ராதிகா ஆப்தே எங்கள் படத்தில் உள்ள இக்காட்சியில் நடிப்பாரா என சந்தேகம் எழுந்த நிலையில் தைரியமாக இக்காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்படத்தில், அவர் ஒரு நடிகருக்கு செய்தி தொடர்பாளராக நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில், அவருடைய செல்போனை ஒருவர் திருடிவிடுவார்.
திருடனைத் தீவிரத்துடன் துரத்துவார் ராதிகா, ஏனெனில் அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும்.
ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு குளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் தன்னுடைய வீடியோ வெளியானால் தன்னுடைய வேலைக்கும் சிக்கல் உண்டாகுமே என்று வருத்தப்படுவார்.
இக்காட்சியில் தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பை கொடுத்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குண்டான ஒரு விஷயத்தைப் பயன்படுத்தி படத்துக்கு விளம்பரம் தேட நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.