மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் இணைந்து கொள்ள
243 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவ அணி இன்று (13) காலை புறப்பட்டு சென்றது.
விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் 20 அதிகாரிகளும், 203 மருத்துவ, பொறியியல் மற்றும் சிப்பாய்கள், அதிகாரிகள் அடங்கிய 223 பேரைக் கொண்ட குழுவே பயணமானது.
இவர்களிற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு விமானம் புறப்பட்டது.
அமைதிப்படையில் இணையும் இராணுவ அணியை வழியனுப்பும் நிகழ்வில் இராணுவத்தளபதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.