Loading...
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை பாராளுமன்ற தேர்தலின் பின்பே மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நியமிக்கப்படுவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மக்கள் வாக்களிப்பின் மூலம் வலுவான மற்றும் அறிவொளி பெற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதன் மூலம் இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் பந்துல கூறியுள்ளார்.
நேற்றையதினம் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் நாட்டை மீட்கும் சாத்தியம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
Loading...