நாய்க்கடி, உயிரையே காவு வாங்கும் மோசமான பிரச்சினை. வீட்டு நாயோ, தெரு நாயோ, தடுப்பூசி போடப்பட்டதோ, போடப்படாததோ எதுவாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடியாலும் ரேபிஸ் தொற்று ஏற்படும்.
கடிபட்ட இடத்தை சோப் போட்டு, குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
நாய்க்கடிக்கு, ரேபிஸ் தடுப்பூசி ஐந்துமுறை போடப்படும். கடித்த தினம் முதல், 3, 5, 7, 28வது நாட்களில் இந்தத் தடுப்பூசி போடப்படும்.
நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 28 ஊசிகள் போடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கையிலேயே ஐந்து முறை ஊசி போட்டுக்கொண்டால் போதும்.
குழந்தையை நாய், பூனை பிராண்டினாலோ, கடித்தாலோகூட, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.