மணல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் நீக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் தற்போது நாடுபூராகவும் மணல் விநியோகம் எவ்வித கட்டுப்பாடுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கும் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் சாட்டி மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுடன் பிரதேச மக்கள் முரண்பட்டதனால் மூவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பிரதேச மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.