குடிபோதையில் ரயில் தண்டவாளத்தினை கடக்க முடியாமல் இருந்த நபர் ஒருவரை ரயில்வே ஊழியர் ஒருவர் நொடிப்பொழுதில் காப்பாற்றிய காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
இக்காட்சியில் குடிபோதையில் இருக்கும் நபர் ரயில் தண்டவாளத்தினை தனது சைக்கிளுடன் கடக்க முயற்சி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட அதன்பின்பு எழுந்து தனது சைக்கிளை தண்டவாளத்திற்கு பக்கத்தில் தூக்கி வீசுகிறார். ஆனால் பின்னே ரயில் வந்துகொண்டிருப்பதை இவர் அவதானிக்கவில்லை. அத்தருணத்தில் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட ரயில்வே ஊழியர் ஒருவர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவரைக் காப்பாற்றியுள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு குடிகாரனின் உயிர் காத்த ரயில்வே தொழிலாளி… ?
தீக் தீக் நிமிடங்கள்…
பாராட்ட பட வேண்டிய நபர்? pic.twitter.com/66PReyf7Iz
— ஆஹான்!! ? (@Kadhar_Twitz) August 20, 2019