மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏராளமான திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில் அஜித் தன்னுடைய இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் தன்னுடைய இரங்கல் அறிக்கையில், ‘மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ்நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என்று நாம் பிரார்த்தித்து கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’
அஜித்தின் இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது.