Loading...
முதல்வர் ஜெயலலிதா முன்பு பிசியாக நடித்து கொண்டிருந்தபோது, புதுமனை புகுவிழா வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு திரை உலகமே திரண்டு இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அதே சமயம் தன் வீட்டு கிரகபிரவேசத்திற்கு அடுத்த நாள் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இதற்காக விமானத்தில் முன்பதிவும் செய்யப்பட்டு இருந்தது.
Loading...
ஜெயலலிதா விமானத்தில் ஏறிய பிறகுதான் பார்த்தார் தன் இருக்கைக்கு அடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் உட்கார்ந்து இருந்தார். இருவரும் மீண்டும் பேச துவங்கினார்கள். காஷ்மீரில் விமானம் இறங்கியபோது சகஜ நிலைக்கு திரும்பி இருந்தார்கள்.
Loading...