மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா தரப்பினர் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக ஓடியோ வெளியிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், கிருஷ்ண மூர்த்தியை சிலர் அதற்கு மறுப்பு தெரிவிக்க கோரி மிரட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவை மன்னார்குடி சசிகலா கும்பல் விஷம் வைத்து கொலைசெய்து விட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வாட்ஸ் அப் ஓடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
தற்போது அதைத் தொடர்ந்து குறித்த நபர்கள் சிலர் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை அக்கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் படி மிரட்டியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.