போலீசார் விசாரணையில் மருமகள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியதில் மாமியாரை மருமகள் மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.