முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையில் சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ வாகனம் மோடி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
சற்று நேரத்திற்கு முன்னர் வற்றாப்பளையிலிருந்து முள்ளியவளை நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் ஒருவரை கேப்பாப்புலவு இராணுவ முகாமிலிருந்து வந்த நோயாளர் காவுவண்டி பின்னால் மோதியதில் முதியவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த முதியவர் அதே இடத்தினைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய சூரிப்பிள்ளை கந்தப்பிள்ளையாவார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் சற்று நேரம் பதட்டமான சூழல் நிலவியதாகவும், இராணுவத்தினர் விபத்து நடந்ததும் அவ்விடத்திலிருந்து நோயாளர் காவுவண்டியை அப்புறப்படுத்தியதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
உடனடியாக குறித்த இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை அத்தியட்சகர், மக்களிடம் விபத்து தொடர்பாக நீதியான விசாரணை நடாத்தப்படுமென உறுதியளித்தபின்னரே சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.