Loading...
ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தவறிவிழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், வாங்கனி ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தாயின் கையை பிடித்தவாறு சென்று கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி விழுந்துள்ளது.
Loading...
இதைக்கண்ட தாய் பதறியவாறு, தூக்க முயற்ச்சி செய்துகொண்டிருக்கும் போது, மின்னல் வேகத்தில் வந்த ஊழியர் ஒருவர், குழந்தையும் காப்பாற்றி அவரும் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்துள்ளார்.
குறிப்பிட்ட காட்சியை மத்திய இரயில்வே துறை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த ஊழியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்த நேரத்தில், தாயின் அலட்சியைத்தையும் பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.
Loading...