பிரித்தானியாவில் வில்ட்ஷயர் பகுதியில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் ஏராளாமானோர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வில்ட்ஷயர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Swindon நகரத்திற்கு அருகே வனப்பகுதியிலேயே மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வில்ட்ஷயர் பகுதி பொலிசார் உறுதி செய்துள்ளதுடன், அந்த எலும்பு கூடு கால பழக்கம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
விசித்திரமான இந்த வழக்கு தொடர்பில் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற விசாரணையின் முதற்கட்ட முடிவு தெரியவர சில வாரங்கள் ஆகலாம் எனவும், தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளதுடன், டி.என்.ஏ சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிக்கலான வழக்கு என்பதால், பொதுமக்களை அப்பகுதியில் அனுமதிக்க பொலிசார் மறுத்துள்ளனர்.