தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் குழுநத்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இது கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை தொடங்கியது. இந்த இரண்டாவது அலையில், முதியவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் அதிக அளவில் கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்தியாவில் ஒருகட்டத்தில் நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். தற்போது படிப்படியாக நோய் பரவல் குறைந்த போதிலும், கேரள, மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பரவல் இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த வாரத்தில் மட்டும் 16 குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 குழந்தைகள் நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்.
“புதுச்சேரியில் இதுவரை 16 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள பதினாறு குழந்தைகளுக்குத் தொற்று உள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்படுவதை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம். பெற்றோர்கள் கொரோனா தடுப்புச் எடுத்துக்கொண்டாலே நோய்த்தொற்று குழந்தைகளுக்கு வராது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் தயாராக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.