திருகோணமலை அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.