சசிகலா குற்றவாளி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நீதிவென்றுள்ளது என அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி பேட்டியளித்துள்ளார்.
ஆரம்பம் முதலே சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த சசிகலா புஷ்பா ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல கேள்விகளை எழுப்பி வந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா கூறியதாவது, இந்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல், ரவுடிசம் முடிவுக்கு வந்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.
அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்கும் படி சசிகலா புஷ்பா கோரியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, சசிகலா குடும்பத்தினர் குற்றவாளிகள், ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
சசிகலா தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.