சர்வதேச கடற்பரப்பில் கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கைத்தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது.
குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறு தத்தளித்த குறித்த படகை தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர், படகை இயக்கிய குழுவினர் பயணிகளுடன் படகை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் (MRCC) இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, ஜப்பானின் Helios Leader என்ற கப்பலைத் தொடர்பு கொண்டு, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அனைவரையும் மீட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட அனைவரும் தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த வகையில், மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுவதாக வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வியட்நாம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கையர்களின் தற்போதைய நிலை, வியட்நாம் இராணுவத்தினர் நடத்தும் விதம் தொடர்பாக கப்பலில் பயணித்து தற்போது வியட்நாமில் உள்ள இளைஞர்கள் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளனர்.