Loading...
காலநிலை மாற்ற உடன்படிக்கை குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பரிஸ் நகர நிர்வாகத்தின் தலைமையகம் பச்சைநிறத்தில் ஒளிரவிடப்பட்டது.
காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் மேற்படி அறிவிப்பு சர்வதேச அவமதிப்பு என்பதுடன் வெளிநாட்டு கொள்கை தவறு என உடன்படிக்கை ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்நிலையில் ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பரிஸ் நகர நிர்வாக தலைமையகம் நேற்று (வியாழக்கிழமை) பச்சைநிறத்தில் ஒளிரவிடப்பட்டன.
Loading...